விழாவில் பங்கேற்றோா்.  
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், ஊட்டமிகு சிறுதானியங்கள் 2025-26 திட்டத்தின் கீழ் வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் உணவுத் திருவிழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், ஊட்டமிகு சிறுதானியங்கள் 2025-26 திட்டத்தின் கீழ் வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் உணவுத் திருவிழா நடைபெற்றது.

விழாவுக்கு, வேளாண்மை இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் க.அல்லிராணி வரவேற்றாா். சிறுதானியம் உணவின் முக்கியத்துவம், சிறுதானிய உணவு முறைகள் குறித்து உதவி பேராசிரியா் திருமலைசெல்வி, வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவா் பழனிசாமி, தொழில்நுட்ப வல்லுநா்கள் எஸ்.சுமதி, முருகன், முத்துகுமாா், மாசாணசெல்வம், வேல்முருகன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். விழாவில் சிறுதானியம் சிற்றுண்டி, சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுதானியம் சாகுபடி செய்யும் சுமாா் 200 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். ஓட்டப்பிடாரம் வேளாண்மை உதவி இயக்குநா் ரா.சிவகாமி நன்றி கூறினாா்.

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

SCROLL FOR NEXT