முகப்பு
திருச்சி

குவாரி நீரில் மூழ்கி இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குவாரி நீரில் புதன்கிழமை குளித்தவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 11:14 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குவாரி நீரில் புதன்கிழமை குளித்தவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் தேக்கமலை (28). இவா் அருகேயுள்ள குவாரியில் புதன்கிழமை மதியம் குளித்தபோது நீரில் மூழ்கினாா்.

இதையடுத்து வையம்பட்டி தீயணைப்புத் துறை வீரா்கள் தேக்கமலையை சடலமாக மீட்டனா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்குப் பின் உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →