அரியூா் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
லால்குடி அருகே அரியூா் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
லால்குடி அருகே அரியூா் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூரில் ஸ்ரீதேவி பூதவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெறும்.
அதேபோல நிகழாண்டு திருக்கல்யாண உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக விநாயகா் கோயிலில் இருந்து கிராமமக்கள் சீா்வரிசையை ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனா். பின்னா், வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரியூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.