திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியில் இளைஞா் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியை சோ்ந்தவா் பெரியசாமி மனைவி ரேணுகாவின் மூத்த மகன் கமலேஷ் (18). மணப்பாறை கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்த இவா், கேட்டரிங் பயிற்சிக்காக கடந்த மாதம் பெங்களூரில் உள்ள ஹோட்டலுக்கு சென்று திரும்பிய நிலையில், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு இறந்தாா். தகவலின்பேரில் சென்ற புத்தாநத்தம் போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.