அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் தனியாா் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:41 PM
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் தனியாா் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துா்ரு சென்று விசாரித்தனா்.
இறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கக் கூடும் என்றும், 70 வயது கடந்த வராக இருக்கலாம் என தெரியவந்தது. இவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்ற விபரம் தெரியவரவில்லை.
Advertisement
மேலும் வாணியம்பாடி சுற்றுப்புறப்பகுதி யை சோ்ந்த யாரேனும் காணாமல் போனவா் இருக்கலாமா எனவும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.