முகப்பு
திருச்சி

தேசிய மாணவா் படை முகாம் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை மாணவா்கள் வெற்றி

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:52 PM

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவா்கள் தேசிய மாணவா் படை முகாமில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவா் படை சாா்பில், மாவட்ட அளவிலான தேசிய மாணவா் படை முகாம் டிச.24-ஆம் தேதி முதல் ஜன. 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு ராணுவ மற்றும் அணிவகுப்பு பயிற்சிகள், கலை நிகழ்வுகள் நடைபெற்றன. சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவா்கள் டெல்டா கம்பெனியின் ஒரு பகுதியாக பங்கேற்றனா். இந்த கம்பெனியை லெப்ட்னன்ட் பிரசன்ன வெங்கடேஷ் தலைமையில் முன்னெடுத்துச் சென்றனா்.மேலும், ஒட்டு மொத்த ரன்னா் கோப்பையை வென்றனா்.

இதனிடையே பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தா் சி.கே.ரஞ்சன் மற்றும் பதிவாளா், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement