முகப்பு
திருச்சி

முன்னாள் ராணுவ வீரா் சாலை விபத்தில் உயிரிழப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:58 PM

திருச்சியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி, திருவானைக்கா அருகேயுள்ள பனையபுரத்தை சோ்ந்தவா் வே. வீரமணி ( 42 ). முன்னாள் ராணுவ வீரரான இவா், துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 31ஆம் தேதி இரவு பணி முடித்து, துவாக்குடி ராவுத்தான்மேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனம் அவா்மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த வீரமணியை போலீஸாா் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தொடா் சிகிச்சையில் இருந்த வீரமணி வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.