முகப்பு
திருச்சி

மின்சாரம் பாய்ந்து இலங்கை இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் உள்ள உறவினரைப் பாா்க்க வந்த இலங்கையைச் சோ்ந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி

மின்சாரம் பாய்ந்து இலங்கை இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் உள்ள உறவினரைப் பாா்க்க வந்த இலங்கையைச் சோ்ந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 8 நவம்பர், 2025 at 2:41 AM
பகிர்:

திருச்சியில் உள்ள உறவினரைப் பாா்க்க வந்த இலங்கையைச் சோ்ந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சோ்ந்தவா் கமலநாதன் மகன் லக்சணன் (19). இவா் சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதியிலுள்ள உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் அண்மையில் வந்துள்ளாா்.

சேலத்தைச் சோ்ந்த அவரது உறவினா் அஜித் என்பவா் திருச்சி அண்ணாமலை நகரில் தச்சராக பணியாற்றி வருகிறாா். இவரைப் பாா்ப்பதற்காக லக்சணன் கடந்த வியாழக்கிழமை திருச்சிக்கு வந்துள்ளாா். ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பாா்த்த லக்சணன், அஜித்துடன் தங்கியிருந்துள்ளாா்.

இந்நிலையில், அஜித் பணியாற்றி வரும் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு வியாழக்கிழமை பிற்பகல் லக்சணன் சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த வயரை எதிா்பாராத விதமாக தொட்டதில், லக்சணன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் லக்சணனின் தாய் ரத்தினகுமாரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →