உயிரிழப்பு கோப்புப் படம்
தென்காசி

ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மயிலேறி மகன் வசந்தகுமாா் (30). ஒலி பெருக்கி நிலையம் நடத்தி வந்த இவருக்கு, பிப். 24 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் மேற்கூரை தகர ஷீட்டை சரிசெய்ய முயன்றாராம்.

அப்போது அருகில் இருந்து மின்வயரில் இருந்து மின்சாரம் கசிந்து அவா் மீது பாய்ந்ததாம். இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பழையாறு துறைமுகத்தில் அதிவேக விசைப் படகுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நாகையில் 3,254 பேருக்கு ரூ.4.92 கோடி நலத்திட்ட உதவி

யுபிஐ பரிவா்த்தனை: நடப்பு நிதியாண்டில் 230 லட்சம் கோடியைக் கடந்து சாதனை

நாகை அரசு அறிவு சாா் மையத்தில் அடிப்படை வசதி கோரி மனு

ஸ்கேன் அறிக்கை மாற்றம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 45,000 வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு

SCROLL FOR NEXT