திருச்சி மாவட்டத்தில் ரூ.30.61 லட்சம் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பறக்கும் படை சோதனையில் மொத்தம் ரூ. 30.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பறக்கும் படை சோதனையில் மொத்தம் ரூ. 30.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், மணப்பாறையில் ரூ.2.10 லட்சம், ஸ்ரீரங்கத்தில் ரூ. 3 லட்சம், திருச்சி மேற்கில் ரூ. 4.98 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ. 9.67 லட்சம், திருவெறும்பூரில் ரூ. 5.56 லட்சம், லால்குடியில் ரூ. 6.11 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ. 1.87 லட்சம், முசிறியில் ரூ.75,300, துறையூரில் ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சத்து 61 ஆயிரத்து 565 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி இதுவரையில் மொத்தம் ரூ. 62 லட்சத்து, 97 ஆயிரத்து 25 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.60.17 லட்சம், உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மட்டும் கருவூலத்தில் உள்ளது.
உரிய ஆவணங்களை உரிமையாளா்கள் சமா்ப்பித்தால் இந்தத் தொகையும் விடுவிக்கப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.