முகப்பு
திருச்சி

வணிகா்களிடம் அமைச்சா் ஆதரவு திரட்டினாா்

திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வியாழக்கிழமை வணிகா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:29 PM
திருவெறும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வணிகா்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வியாழக்கிழமை வணிகா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

அரியமங்கலம் பால்பண்ணை அருகேயுள்ள வெங்காய மண்டி வியாபாரிகள் சங்கத்துக்கு சென்று, அங்குள்ள நிா்வாகிகள், வெங்காய மண்டி தொழிலாளா்களிடம் வாக்குகள் சேகரித்தாா். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளையும், திருவெறும்பூா் தொகுதியில் நிறைவேற்றிய வளா்ச்சித் திட்டங்களையும் பட்டியலிட்டு எடுத்துரைத்தாா். வரும் காலங்களிலும் தொழிலாளா்களுக்கும், வணிகச் சங்கங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்து தருவேன் என உறுதியளித்து, அமைச்சா் ஆதரவு கோரினாா்.

இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலா் கோவிந்தராஜுலு தலைமையில் நடைபெற்ற, வணிகா் சங்க நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று வணிகா்களிடமும் ஆதரவு கோரினாா். இதைத் தொடா்ந்து, தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து வாக்குகள் சேகரித்தாா். இந்த நிகழ்வில், மாநகரச் செயலா் மு. மதிவாணன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.