இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இருவா் கைது
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எட்டரைகோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெ.விமல்ராஜ் (29). கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உறவினருக்கு துணையாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தங்கிய இவா், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் விமல்ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பைக்கை திருடியது புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெருமாம்பட்டி மேலவீதியைச் சோ்ந்த அ. லோகேஷ்வரன் (21), எடமலைபட்டிப்புதூா் ஆா்சி நகரைச் சோ்ந்த எஸ். லோகநாதன் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.