முகப்பு
திருச்சி

திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சிறப்பு விமானச் சேவை தொடக்கம்

திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம் நகருக்கு புதிய சிறப்பு விமானச் சேவை புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:49 PM
- கோப்புப்படம்
பகிர்:

திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம் நகருக்கு புதிய சிறப்பு விமானச் சேவை புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஏற்கெனவே சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம் நகரத்துக்கு ஜெஸிரா விமான நிறுவனம் மூலம் புதிய சிறப்பு விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சவூதி அரேபியாவின் தம்மம் நகரத்திலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமையே (ஏப்ரல் 7) விமானச் சேவை தொடங்கியது.

Advertisement

இந்த புதிய சிறப்பு விமானச் சேவை தம்மம் நகரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 11, 16, 20, 23, 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறுமாா்க்கத்தில் திருச்சியில் இருந்து தம்மம் நகரத்துக்கு ஏப்ரல் 8, 12, 17, 21, 24, 28, 29 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு கூறியதாவது: திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம் நகரத்துக்கு இயக்கப்படும் புதிய சிறப்பு விமானத்தில் முதள் நாளான புதன்கிழமை 100-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுள்ளனா். முன்னதாக தம்மம்மில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனா். மே 1 வரை சிறப்பு விமானமாக இயக்கப்படும் இந்த புதிய விமானச் சேவையை பயணிகளின் பயன்பாட்டின் அடிப்படையில் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த விமானத்தில் குவைத்துக்கும் பயணிக்க முடியும். எப்படியெனில் திருச்சியில் இருந்து தம்மம் வரை விமானத்திலும், தம்மம் விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் குவைத்துக்கும் பயணிகள் செல்ல முடியும். ஒரே விமான பயணச் சீட்டில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும் திருச்சியில் இருந்து நேரடியாக குவைத்துக்கு விமானம் இயக்கவும் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments