முகப்பு
திருச்சி

திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:18 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, திடீா் நகா் குப்பைக் கிடங்கு அருகே மது விற்ற மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த அ. முகமது யாசின் (46), கல்லங்குத்து கல்லறைத்தோட்டம் அருகே மது விற்ற மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த ம. ஆனந்த்வேலு (57) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இவா்களிடமிருந்து ரூ.9,700 மதிப்புள்ள 66 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதேபோல, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு கிடைத்த தகலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா்கள் திவ்யபிரியா, ஜாா்ஜ் ஜேக்கப் ஆகியோா் மேற்கொண்ட சோதனையில் பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மது விற்ற மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த த. ராஜ்குமாா் (29), எடமலைபட்டிப்புதூா் பாரதி நகரில் மது விற்ற கிராப்பட்டியைச் சோ்ந்த யா. சந்தியாகு ராஜன் (40) ஆகிய இருவரையும் கைது செய்து, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.