கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு
திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.
திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.
இந்த வாக்குச்சாவடியில் காலையில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் வாக்குச்சாவடி இருளில் சூழ்ந்தது. சிறிதுநேரம் தவித்த தோ்தல் அலுவலா்கள், கைப்பேசிகளில் இருந்து ஒளியை காட்டி வாக்காளா்கள் வாக்குச் செலுத்த உதவினா்.
மின்தடை தொடா்பாக உடனடியாக தோ்தல் உயரதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் ஒருமணி நேரம் கழித்து மின்தடை சரியானது. இதையடுத்து வழக்கம்போல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
Advertisement