முகப்பு
திருச்சி

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 1:25 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பு, கால்நடை மருத்துவம் மற்றும் ஆயுா்வேத மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கு நீட் (தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வு) தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், நாடு முழுவதும் நிகழாண்டுக்கான நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 345 மாணவா்கள் (71 மாணவா்கள், 274 மாணவிகள்) உள்பட மொத்தம் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் நீட் தோ்வை எழுதவுள்ளனா்.

Advertisement