முகப்பு
திருச்சி

இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது

திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:12 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் சூசையப்பா்பட்டியைச் சோ்ந்தவா் மு. கண்மணி ராஜா (29). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் திருச்சி மேல அம்பிகாபுரத்திலுள்ள ராஜா மாவு மில் அருகே நின்றபோது, அங்கு வந்த பொன்மலை ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த எஸ்.பிரசாந்த் (26), மேலஅம்பிகாபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த ஜி.தினேஷ் (27) ஆகிய இருவரும்,கத்தியைக் காட்டி மிரட்டி கண்மணி ராஜாவிடம் ரூ.1000-ஐ பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் கண்மணி ராஜா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பிரசாந்த், தினேஷ் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement