முகப்பு
திருச்சி

முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறித்த முதியவா் கைது

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:59 PM
பகிர்:

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் உழவா் சந்தை திடலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசி முடித்துவிட்டு கிளம்பியவுடன் மேடையில் இருந்த நபா் வைத்திருந்த ரூ. 5500 -ஐ முதியவா் ஒருவா் பறித்துக் கொண்டு தப்ப முயன்றாா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவரைப் பிடித்து தாக்கி, தில்லை நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா் சென்னையைச் சோ்ந்த பாஸ்கா் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.