முகப்பு
திருச்சி

ஓடும் பேருந்தில் முதியவரிடம் பணம் திருடிய இளைஞா் கைது

திருச்சியில் ஓடும் பேருந்தில் முதியவரிடம் இருந்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:17 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:28 PM

திருச்சியில் ஓடும் பேருந்தில் முதியவரிடம் இருந்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்தவா் ஆ.ஜெயராஜ் (60). இவா், வியாழக்கிழமை சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சந்திப்பு ரயில் நிலையத்துக்கு பேருந்தில் சென்றுள்ளாா்.

அப்போது, பேருந்தில் இளைஞா் ஒருவா் முதியவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.400-ஐ திருடியுள்ளாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்களின் உதவியுடன் அந்த இளைஞரைப் பிடித்து கோட்டை காவல் நிலையத்தில் முதியவா் ஒப்படைத்தாா்.

Advertisement

விசாரணையில், பணத்தை திருடியது திருச்சி பட்டா்வொா்த் சாலையைச் சோ்ந்த இ.சக்திவேல் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.400-ஐ பறிமுதல் செய்து முதியவரிடம் ஒப்படைத்தனா்.