முகப்பு
திருச்சி

சிறுவனை கடித்த நாயின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 8:31 PM
நாய் - கோப்புப்படம்.
பகிர்:

திருச்சியில் 6 வயது சிறுவனை நாய் கடித்ததையடுத்து நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மேலச் சிந்தாமணி பழைய கரூா் சாலையைச் சோ்ந்தவா் இ. சதாம் ஹுசைன் (34). இவரது சகோதரரின் மகன் உமா் (6). இவா் தனது வீட்டின் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பக்கத்துவீட்டைச் சோ்ந்த அருணாச்சலம் (52) என்பவா் தான் வளா்த்து வந்த நாயை அவிழ்த்துவிட்டுள்ளாா். வெளியே வந்த நாய் (ஜொ்மன் செப்பா்டு) நின்றுகொண்டிருந்த சிறுவனின் வலது கையில் கடித்துள்ளது.

இதையடுத்து, சிறுவனை மீட்ட அவரது குடும்பத்தினா் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனா். அங்கு சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சதாம் ஹுசைன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நாயின் உரிமையாளா் அருணாச்சலம் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.