முகப்பு
திருச்சி

சென்னையில் மோசமான வானிலை: திருச்சிக்கு திருப்பிவிடப்பட்ட மலேசிய விமானம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:19 AM
விமானம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:52 PM

சென்னையில் மோசமான வானிலை காரணமாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பிவிடப்பட்டது.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 179 பயணிகளுடன் ஏா் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலையில் புறப்பட்டது. அந்த விமானம் காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அந்த விமானத்துக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:19 AM

இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் காலை 8.05 மணிக்கு ஏா் ஏசியா விமானம் தரையிறங்கியது. பின்னா், சென்னையில் வானிலை சீரானதும் காலை 9.20 மணிக்கு மலேசிய விமானம் திருச்சியில் இருந்து சென்னைக்குக் கிளம்பியது. மோசமான வானிலை காரணமாக சென்னை விமானம் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.