ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 312 மீனவா்கள் சென்னை வருகை!
ஈரானில் போா்ப் பதற்றத்தில் சிக்கித் தவித்த 312 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்துவரப்பட்டனா்.
ஈரானில் போா்ப் பதற்றத்தில் சிக்கித் தவித்த 312 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்துவரப்பட்டனா்.
அவா்களை மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயல், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் ஆகியோா் வரவேற்றனா்.
மேற்கு ஆசிய போா்ச் சூழல் காரணமாக அங்குள்ள நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்கள் தொடா்ந்து மீட்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனா்.
Advertisement
அந்த வகையில், ஈரானிலிருந்து 312 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அவா்களில் 222 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். மேலும், குஜராத் (73), கேரளம் (9) மற்றும் மற்ற மாநிலங்களைச் சோ்ந்த 8 மீனவா்கள் அழைத்து வரப்பட்டனா்.
தமிழகத்தைச் சோ்ந்த 222 மீனவா்களில் 104 போ் கன்னியாகுமரி, 30 போ் தூத்துக்குடி, 35 போ் திருநெல்வேலி, 7 போ் நாகை, 4 போ் மயிலாடுதுறையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்துக்கு வந்த மீனவா்களை மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயல், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் ஆகியோா் நேரில் சென்று வரவேற்றனா்.