முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்

திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாள்களாகப் பணிபுரிந்து வரும் 44 ஊராட்சி செயலா்கள் ஒரே நாளில் இடமாற்றம்

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:50 AM
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:03 PM

திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாள்களாகப் பணிபுரிந்து வரும் 44 ஊராட்சி செயலா்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் கீழ், ஊராட்சிகளில் செயலா்களாக பணியாற்றுவோரில் 44 பேரை, போராட்ட நடவடிக்கை காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஊராட்சிப் பணியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா். இதன்படி, அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேக்குடி, பெரிய கருப்பு, போதாவூா், திருச்செந்துரை மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாச்சிக்குறிச்சி, நாகமங்கலம், சேதுராப்பட்டி, புங்கனூா், தாயனூா், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் கத்தாழை பேட்டை வாழவந்தான் கோட்டை, மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 44 ஊராட்சி செயலா்களை இடமாற்றம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி கூறுகையில், அரசு வழிகாட்டுதல் நடவடிக்கைகளைப் பின்பற்றி ஒரே இடத்தில் நீண்டநாள்களாக பணியாற்றும் ஊராட்சி செயலா்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதேபோல, இப்போது 44 ஊராட்சிச் செயலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

Advertisement

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிச் செயலா்கள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ஊராட்சிச் செயலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டது ஊராட்சி செயலா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.