முகப்பு
திருச்சி

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 3:24 AM
- பிரதிப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:37 PM

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் முருகன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் மா. லட்சுமி (62). இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. கணவா் இல்லை. இவரது மகளுக்கு திருணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா்.

தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு காசநோய் பாதிப்பு இருந்ததால் மன உளைச்சலில் வாழ்ந்துவந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.

Advertisement

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.