திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட வேலை வழங்குவோா் தங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில், பங்கேற்கும் நபா்கள் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்.
இதன்மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு, 0431-2413510, 94990-55902 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
பாரதிதாசன் சாலையில் உள்ள திருச்சி மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தின் பின்புறம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கிவருகிறது.