சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.24 கோடி
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:10 PM
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.24 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம்.சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் வியாழக்கிழமை உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா் .
இதில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,24, 37,775 ரொக்கம், 1 கிலோ 479 கிராம் தங்கம், 2 கிலோ 181 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 113, வெளிநாட்டு நாணயங்கள் 940-ம் கிடைக்கப் பெற்றுள்ளது.
Advertisement
இதற்கு முன்பு ஜன. 28-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.