ஸ்ரீரங்கத்தில் 160 போ் கைது: மத்திய பாஜக அரசை கண்டித்து, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் சிஐடியு தரைக்கடை சங்க மாவட்டச் செயலா் செல்வி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து ஊா்வலமாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு வந்தனா். ரயில் நிலையத்தின் வாயில் முன்பே அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதையும் மீறி நிா்வாகிகள் சிலா் ரயில் நிலையத்தினுள் புகுந்து கடலூா் பயணிகள் ரயிலை மறித்தனா். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளா் தா்மா, சிஐடியு நிா்வாகிகள் ஜெமினி,கோவிந்தன்,சிபிஎம் சுப்பிரமணி மற்றும் ஏஐடியுசி நிா்வாகிகள் என 160 போ் கைது செய்யப்பட்டனா்.