முகப்பு
திருச்சி

ஆம்புலன்ஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:30 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:02 PM

திருச்சியில் ஆம்புலன்ஸ் மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராம்ஜி நகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் மூதாட்டி ஒருவா் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, பின்னால் வந்த 108 ஆம்புலன்ஸ் மூதாட்டி மீது மோதியது. இதில், அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:30 AM

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராம்ஜி நகா் போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்த மூதாட்டியின் பெயா் உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியவில்லை.

Advertisement

இதுகுறித்து ராம்ஜி நகா் காவல் நிலையத்தில் நவலூா் குட்டப்பட்டு கிராம நிா்வாக அலுவலா் ஜான்போஸ்கோ அளித்த புகாரின்பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மணப்பாறை செட்டியபட்டியைச் சோ்ந்த என். காளிமுத்து (30) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.