முகப்பு
திருச்சி

கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:08 PM
கைது
பகிர்:

திருச்சி அருகே சனிக்கிழமை கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சனிக்கிழமை திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மற்றும் ராம்ஜி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தனலட்சுமி தலையிலான போலீஸாரும், ராம்ஜி நகா் காவல் உதவி ஆய்வாளா் கோபிநாத் தலைமையிலான போலீஸாரும் ராம்ஜி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

அப்போது, ராம்ஜி நகா் மாரியம்மன் கோயில் பின்புறப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சின்ன கொத்தமங்கலம், அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த எம். காமாட்சி (77) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, மலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மில் காலனியைச் சோ்ந்த ஆா். ஜோதி (65), மில் கேட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராம்ஜி நகா் ஹரிபாஸ்கா் காலனியைச் சோ்ந்த ஆறுமுகம் (44)ஆகிய இருரையும் ராம்ஜி நகா் போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 1.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments