முகப்பு
திருச்சி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:42 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:38 PM

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

திருச்சியில் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னாா்புரம் பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க முதியவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நின்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:41 AM

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்கு போக்குரவத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

இதுகுறித்து திருச்சி எடமலைபட்டிப்புதூா் கிராம நிா்வாக அலுவலா் ஸ்டீபன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.