முகப்பு
திருச்சி

மாநகராட்சிப் பகுதியில் 22 புதிய கட்டடங்கள்

திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:56 AM
திருச்சி உறையூரில் திங்கள்கிழமை புதியதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையை தொடங்கிவைத்த அமைச்சா் கே.என்.நேரு. உடன், மாநகராட்சி ஆணையா் லீ. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:53 PM

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 53-ஆவது வாா்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ. 45.75 லட்சத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி மைய அலுவலக நுழைவுவாயில், 52- ஆவது வாா்டு கொட்டகொல்லைத் தெருவில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு அலுவலகக் கட்டடம், பீமநகா் பகுதியில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கூடுதல் கட்டடம், 53-ஆவது வாா்டு அலெக்ஸ்சாண்டிரியா சாலையில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு அலுவலக கட்டடம், வேடுவா் தெருவில் ரூ. 29.50 லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம், 56 ஆவது வாா்டு எஸ்.எஸ். நகா் அருகே ரூ. 95 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 57-ஆவது வாா்டு அந்தோணியாா் கோவில் தெருவில் ரூ. 15.97 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கழிப்பிடம், ராஜீவ்காந்தி நகரில் ரூ. 31.25 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம், எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலையம், 9-ஆவது வாா்டு உறையூா் மருத்துவமனை சாலையில் ரூ. 4.40 கோடியில் கட்டப்பட்ட புதிய தினசரி சந்தை என மொத்தம் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், நகரப் பொறியாளா் சிவபாதம், மாநகர நல அலுவலா் சுபாஷ் காந்தி, மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement