முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான தொட்டியம், அரங்கூா், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளுப்பட்டி, எம். புத்தூா், ஏலூா்ப்பட்டி, எம்.களத்தூா், மேய்க்கல்நாயக்கன்பட்டி, காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூா், கொளக்குடி, தும்பலம், நாடாா்காலனி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின் விநியோகம் இருக்காது என முசிறி மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.