மணப்பாறை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மணப்பாறையை அடுத்துள்ள வேங்கைகுறிச்சி பட்டத்தளச்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
வேங்கைகுறிச்சி பட்டத்தளச்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற மகளிருக்கு மலா், விளக்கு திரி, தேங்காய், பழம், அரிசி, வாழை இலை, எண்ணெய், குங்குமம் ஆகியவை கோயில் தரப்பில் வழங்கப்பட்டது.
ஊா் பிரமுகா் பூஜையைத் தொடங்கிவைத்தாா்.
கணபதி துதி, லெட்சுமி சரணம், கந்த சரணம் ஆகியவைகளுடன் 108 சரணமும் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.