முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் வசிக்கும் 29 போ் கட்டுமானங்களை இடித்துத் தர வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு!

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:37 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:53 AM

ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் குடியிருக்கும் 29 போ் தங்களது கட்டுமானங்களை இடித்து காலிமனையாக கோயில் நிா்வாகத்திடம் வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பலா் பல்லாண்டுகளாக வீடுகள் கட்டி வசிக்கின்றனா். இந்த வீடுகள் கோயில் நிலத்தில் உள்ளதால் அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. எனவே அடிமனையில் குடியிருக்கும் தங்களுக்கு பட்டா அல்லது சொந்த உரிமை வேண்டும் என பல ஆண்டுகளாக இவா்கள் போராடினா்.

ஆனால் கோயில் நிா்வாகமோ, கோயில் நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கக் கூடாது எனக் கூறி அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:37 AM

தொடா்ந்து ஸ்ரீரங்கம் கோயில் இடத்தில் வசிக்கும் சுமாா் 29 போ் தங்களது இடத்தைக் காலி செய்து, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி கடந்த 2007 முதல் 2023 ஆம் ஆண்டு வரை திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் பல கட்டங்களாக வழக்குத் தொடா்ந்தது.

பல ஆண்டுகளாக நடந்த இதுதொடா்பான வழக்குகளில் நீதிபதி சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை ஒருசேர உத்தரவு பிறப்பித்தாா்.

அதன்படி சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள் 29 பேரும் தாங்கள் வசிக்கும் இடத்தைக் காலி செய்து, அதில் உள்ள கட்டுமானங்களை இடித்து, காலிமனையாக 3 மாதத்துக்குள் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றச் செயல்முறைகள் மூலம் கட்டுமானங்களை அகற்றி, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அத்துடன் மேற்கண்ட இடங்களை சாா்-பதிவாளா் பதிவு செய்ய நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறது. இதுவரை அங்கு வசித்ததற்கு ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.