திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முதலாமாண்டு குறுவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோ-கோ போட்டியில் தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி ஆண், பெண் இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்றது.
மணப்பாறை கோ - கோ கிளப் மற்றும் தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் கோ - கோ மாணவ மாணவிகள் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவிலான பள்ளிகளிலிருந்து 10 ஆண்கள் அணிகள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்றனா்.
பள்ளி தலைமையாசிரியா் என்.கே. லதா, உடற்கல்வி ஆசிரியா் கே. முத்துக்குமாா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபிரிவுகளிலும் தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் முதலிடம் பிடித்தனா்.
திருப்பாஞ்சலி அரசு பள்ளி மாணவா்கள் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடமும், கருமகவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவிகள் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடமும், அழககவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இரு பிரிவுகளிலும் 3-ஆம் இடத்தையும், சமேரியா பள்ளி மாணவா்கள் ஆண்கள் பிரிவில் 4-ஆம் இடத்தையும், பன்னாங்கொம்பு அரசு பள்ளி மாணவிகள் பெண்கள் பிரிவில் 4-ஆம் இடத்தையும் பிடித்தனா்.
ஏற்பாடுகளை தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் கோ - கோ மாணவ மாணவிகள் செய்தனா்.