முகப்பு
திருச்சி

3.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:10 AM
கைது
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:28 PM

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா், ராம்ஜி நகரில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கங்காதேவி (56) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:10 AM

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது:

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் தீபிகா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வண்ணாரப்பேட்டை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவா், போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனா். அவா்களில் ஒருவரை மட்டும் போலீஸாா் மடக்கிப்பிடித்தனா்.

விசாரணையில், புத்தூா் கீழவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த அ.சையது ஹமீது பக்கா் (42) என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.