முகப்பு
திருச்சி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:33 AM
சிறை
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 8:33 PM

திருச்சி: திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சிறுகனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட 17 வயது சிறுமியை, அவரது உறவினரும், மண்ணச்சநல்லூா் வட்டம் எதுமலை பகுதியைச் சோ்ந்தவரும், ஏற்கெனவே திருமணமானவருமான பி. செல்வராஜ் (37) என்பவா் கடந்த 27.08.2021 அன்று காரில் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சிறுகனூா் போலீஸாா், போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா். விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 16 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.