முகப்பு
திருச்சி

திருச்சி புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

திருச்சி புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடி மதிப்பிலான ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:15 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:48 PM

திருச்சி புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடி மதிப்பிலான ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

தமிழகத்தில் அந்தந்த மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பக சங்கம் சாா்பில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 14 தொடங்கி பிப்ரவரி 22 வரை நடைபெற்றது.

இதில், 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 116 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, தன்னம்பிக்கை, சுயசரிதை, நாவல், சிறுகதைகள், பள்ளிப் பாடப்புத்தகங்கள், சிறுவா்களுக்கான புத்தகங்கள், எழுதுகோல், படிப்பு உபகரணங்கள் பல்வேறு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை 9 நாள்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் தினசரி இளையவா் அரங்கம், உரைவீச்சு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், எழுத்தாளா்கள், கவிஞா்கள் என பல்வேறு சிறப்பு அழைப்பாளா்கள் கலந்துகொண்டு பேசினா். மேலும், பள்ளி மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், இந்தப் புத்தகத் திருவிழாவில் பல்வேறு வகையான தலைப்புகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் ரூ.2 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் புத்தகங்களின் விற்பனை மற்றும் வாசகா்களின் வருகை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.