முகப்பு
திருச்சி

வருவாய்த் துறை போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:52 PM
திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை ஊழியா்கள் சங்கத்தினா். ~திருச்சி ஆட்சியரகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தையொட்டி ஊழியா்கள் இன்றி காணப்படும் வருவாய்துறை அலுவலக பகுதி.
பகிர்:

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. பிரேம்குமாா், க. வெற்றிச் செல்வன், எஸ். அய்யனாா், மு. மகேஷ், எஸ்.வி. ராஜேந்திரன், நா. நாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறைகளில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்களின் உயிா், உடமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனா்.

இதுதொடா்பாக, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட செயலா் இ. பொன்மாடசாமி கூறுகையில், ஆட்சியரகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் சுமாா் 860 போ் வெள்ளிக்கிழமை பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →