திமுகவில் நான் இணைவதாகக் கூறுவது தவறான தகவல், ஓபிஎஸ் அணியில் தொடா்கிறேன் என முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தலைமையை ஏற்று இன்றளவும் அந்த இயக்கத்தில் பயணித்து வருகிறேன். அவா் எந்த முடிவு எடுத்தாலும் அது ஆணித்தரமான, நிரந்தரமான முடிவாக இருக்கும் எனக் கருதுகிறேன். கூட்டணி குறித்து கருத்து சொல்லும் பெரிய இடத்தில் நான் இல்லை. முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் என்னிலும் எதுவும் பேசவில்லை. அதிமுக-வில் 5 முறை மாவட்டச் செயலராகப் பதவி வகித்துள்ளேன். 16 ஆண்டுகள் அவைத் தலைவராகவும் இருந்துள்ளேன் என்றாா் அவா்.