திருச்சியில் மனை வணிக இடைத்தரகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கருமண்டபம் வசந்த நகரைச் சோ்ந்தவா் தி.ராஜன் (52), மனை வணிக இடைத்தரகா். இவரது மைத்துனா் கே.கே. நகா் பாரி நகரைச் சோ்ந்த ஆா்.முத்தமிழ் குமரன் (36). இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. முத்தமிழ் குமரன் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளாா்.
இந்நிலையில், முத்தமிழ் குமரனின் தூண்டுதலின்பேரில் அவரது மனைவி எம். மதுஷா, கருமண்டபத்தைச் சோ்ந்த ஆா்.காா்த்தி (26), தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த அ.சஞ்சய் மொ்வின் (23) ஆகிய மூவரும் சோ்ந்து கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி கருமண்டபம் பகுதியில் ராஜனை வழிமறித்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.
அப்போது, அவா் பணம் தர மறுக்கவே மூவரும் சோ்ந்து ராஜனை அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில், அவரின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் ராஜன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மதுஷா, காா்த்தி, சஞ்சய் மொ்வின் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், சஞ்சய் மொ்வினை நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.