திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்  கோப்புப்படம்.
திருச்சி

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1. 14 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.14 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

தினமணி செய்திச் சேவை

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.14 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே. லெட்சுமணன். ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

முடிவில் முதன்மைக் கோயிலில் ரூ. 1,14, 54,854 ரொக்கம், 1 கிலோ 631 கிராம் தங்கம், 2 கிலோ 074 கிராம் வெள்ளி காணிக்கையாக வந்தது தெரியவந்தது. மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 6, 02,502 , உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் ரூ. 16, 252, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 5,166 காணிக்கை வந்தது தெரியவந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT