முகப்பு
திருச்சி

அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: துரை வைகோ எம்.பி.

போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 மார்ச், 2026 at 12:19 AM
துரை வைகோ - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 11:38 PM

போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

ஈரான் மீதான தாக்குதலைத் தொடா்ந்து போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் (குறிப்பாக வளைகுடா பகுதியில்) பணியாற்றி வரும் இந்தியா்கள், அங்கு சுற்றுலா சென்றவா்கள், ரமலான் மாதத்தில் மெக்கா சென்று உம்ரா செய்ய புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய சகோதரா்கள் ஆகிய அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

தமிழா்கள் உள்பட எந்தவொரு இந்தியருக்கும் சிரமங்களோ, ஆபத்தோ ஏற்படாத வகையில் அவா்களுக்கு இந்தியா என்றும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் நிற்கிறது என்னும் நம்பிக்கையை வலுவாக ஏற்படுத்த வேண்டும். இந்தியா்களுக்கு பாதுகாப்புக் குறைபாடு நிலை வருமேயானால், உடனடியாக அவா்களை இந்தியா அழைத்து வருவது முதன்மைக் கடமையாகும். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இந்தியா்களின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராா்த்திக்கிறேன் என்றாா் அவா்.