கா. அன்பழகன் நினைவு தினம் அனுசரிப்பு
திமுகவின் முன்னாள் பொதுச்செயலரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான பேராசிரியா் கா. அன்பழகன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியா் கா. அன்பழகனின் உருவப் படத்துக்கு மாவட்ட செயலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
இதில், மாநகரச் செயலா் மு. மதிவாணன், பகுதி செயலா் மோகன் மற்றம் திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.