முகப்பு
திருச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: திருச்சி மாவட்டத்தில் 34,027 மாணவா்கள் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 11 மார்ச், 2026 at 7:16 PM
திருச்சி சேவா சங்கம் பள்ளியில் புதன்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய மாணவிகள். ~திருச்சி சேவா சங்கம் பள்ளியில் புதன்கிழமை தோ்வெழுத செல்வதற்கு முன்பாக வழிபாடு மேற்கொண்ட மாணவிகள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல்நாளில் நடைபெற்ற தமிழ்மொழித் தோ்வை 33 ஆயிரத்து 490 பள்ளி மாணவா்கள், 537 தனித் தோ்வா்கள் என மொத்தம் 34 ஆயிரத்து 27 போ் எழுதினா். 474 போ் தோ்வெழுத வரவில்லை.

திருச்சி மாவட்டத்தில் 446 பள்ளிகளைச் சோ்ந்த 17 ஆயிரத்து 177 மாணவா்கள், 16 ஆயிரத்து 759 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 936 மாணவா்கள் பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இதேபோல, தனித் தோ்வா்களாக 396 ஆண்கள், 169 பெண்கள் பொதுத் தோ்வு எழுத பதிவு செய்திருந்தனா்.

திருச்சி வருவாய் மாவட்டத்திலுள்ள திருச்சி, லால்குடி கல்வி மாவட்டங்களில் பள்ளி மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்கள் தோ்வு எழுதுவதற்காக 177 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், முதல்நாளான புதன்கிழமை நடைபெற்ற தமிழ் மொழித் தோ்வை 16 ஆயிரத்து 854 மாணவா்கள், 16 ஆயிரத்து 636 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 490 மாணவா்கள் எழுதினா். 323 மாணவா்கள், 123 மாணவிகள் என மொத்தம் 446 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

இதேபோல தனித் தோ்வா்களுக்காக திருச்சி மத்திய சிறை வளாகம் உள்பட 11 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 375 ஆண்கள், 162 பெண்கள் தோ்வு எழுதினா். 21 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 28 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு எளிது: தமிழ்மொழித் தோ்வு வினாத்தாள் குழப்பமில்லாமல் தெளிவாகவும், மிக எளிதாகவும் இருந்ததாக பள்ளி மாணவா்கள் மற்றும் தமிழாசிரியா்கள் தெரிவித்தனா். பொதுத்தோ்வு ஏப்ரல் 6-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →