முகப்பு
திருச்சி

தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 11:48 PM
திருச்சி ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினா்.
பகிர்:

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே சிஐடியு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா்.

இதில், திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தரைக்கடை அமைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்ததும் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது.

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனைய சாலையோரத்தில் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்வதை தடைசெய்யக் கூடாது. தரைக்கடை வியாபாரிகள் கடை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். மத்தியப் பேருந்து நிலையம், பேருந்து நிலையமாகவே தொடர வேண்டும், வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் செல்வி, வியாபாரக் குழு உறுப்பினா் டி. கணேசன், சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், மாவட்டத் தலைவா் மணிமாறன், துணைத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →