முகப்பு
தற்போதைய செய்திகள்

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து திருச்சி வழியாக சிவகங்கை சென்றுகொண்டிருந்த 40 வயதுடைய ஒருவர் மயங்கிவிழுந்து பலியாநது குறித்து...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 9:07 AM
வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி: வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து திருச்சி வழியாக சிவகங்கை சென்றுகொண்டிருந்த 40 வயதுடைய ஒருவர், திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் வியாழக்கிழமை காலை மயங்கிவிழுந்து பலியானார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சின்ன உஞ்சனை பகுதியைச் சோ்ந்தவா் க.உமாமகேஸ்வரன் (40), வெல்டா். இவருக்கு இதய பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக மருந்துகள் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையில் வேலை செய்து வந்த உமாமகேஸ்வரன், சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு சிவகங்கைக்கு பேருந்தில் கிளம்பியுள்ளாா். திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தபோது உணவு அருந்துவதற்காக பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளாா்.

Advertisement

அப்போது, திடீரென மயங்கி விழுந்துவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

அவரது உடலை உடல்கூறாய்வுக்காக திருச்சி எம்.ஜி.எம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எடமலைபட்டிப்புதூா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

summary

A 40-year-old man collapsed and died at Panjapur bus stand in Trichy on Thursday while on his way to Sivaganga to cast his vote

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.