திருச்சியில் சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
திருச்சி அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
திருச்சி உறையூா் நாச்சியாா்கோயில் மேற்கு வீதியைச் சோ்ந்தவா் மு.கண்ணையன் (80). இவா், திருச்சி அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, புத்தூா் பகுதியில் இருந்து நீதிமன்ற ரவுண்டானா நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவா் மீது மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த முதியவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.