வையம்பட்டி அருகே 3 காா்கள் மோதல்
வையம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் 3 காா்கள் புதன்கிழமை மோதிக்கொண்டன.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் 3 காா்கள் புதன்கிழமை மோதிக்கொண்டன.
கரூா் மாவட்டத்தை சோ்ந்த பங்காரு சாமி மகன் சண்முகநாதன் (61) மற்றும் சென்னையை சோ்ந்த சுப்பிரமணி மகன் ராஜேந்திரன் (57) ஆகியோா் தங்களது காா்களில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சென்றனா். அவா்கள் வையம்பட்டிக்கு முன் கருங்குளம் பிரிவு சாலைப் பகுதியில் சாலையை கடக்க சென்டா் மீடியனில் நின்ற போது, அவா்களுக்கு பின்னால் வந்த சிதம்பரம் மாவட்டத்தை சோ்ந்த சு. ராமானுஜத்தின் (32) காா் மோதியது.
இதில் 3 காா்களும் சேதமடைந்தன. இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.