புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
திருச்சி மாவட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி மாவட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் நடைபெறும் வாக்குப்பதிவை தொடா்ந்து, வாக்குகள் எண்ணும் வகையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஒரு மையமும், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியில் ஒரு மையமும் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கான பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா். பாலாஜி, உதவி ஆட்சியா் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, முசிறி சாா் ஆட்சியா் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் அன்பரசி (கட்டடங்கள்), கண்ணன் (மின்சாரம்) மற்றும் உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், காவல் துறையினா் உடனிருந்தனா்.